மதுரையில் நகைக்கடையில் ரூ.200 பவுன் மோசடி
மதுரையில் பிரபல தனியார் நகைக் கடையில் 200 பவுன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பிரபல தனியார் நகைக் கடையில் 200 பவுன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தெற்குமாசி வீதியில் பிரபல தனியார் நகைக்கடை உள்ளது. இக் கடையில் பொதுமக்களுக்கு நகை விற்பனை செய்யப்படுவதுடன், சிறிய கடைகளுக்கும், அதிகளவில் நகை வாங்குவோருக்கும் முன்பதிவு அடிப்படையில் நகைகள் வடிவமைத்துத் தருகின்றனர்.
அவ்வாறு வெளியில் உள்ள கடைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தர வேண்டிய சுமார் 200 பவுன் நகைகள் உரிய நேரத்தில் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை மாதமாக இதுபோல நகைகள் உரியவர்களிடம் அளிக்கப்படவில்லையாம். இதையடுத்து, கடை நிர்வாகத் தரப்பில் தெற்குவாசல் குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதனடிப்படையில், கடை ஊழியர்கள் இருவரிடம் போலீஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடை மேலாளரையும் விசாரணைக்கு அழைக்கச் சென்றபோது, அவர் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரையும் போலீஸôர் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மதுரை மாநகர் குற்றப் பிரிவு துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் கேட்டபோது, சுமார் 200 பவுன் நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என நகைக் கடை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால், புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரித்து வருகிறோம். சமீப காலமாக நகை தொடர்பான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றார்.