1,500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து பயிற்சி மருத்துவர்கள் 4 பேர் சாவு
குமுளி அருகே வாகமண் கோலாகலமேடு மலைச் சாலையில் 1,500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், பயிற்சி மருத்துவர்கள் 4 பேர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
குமுளி அருகே வாகமண் கோலாகலமேடு மலைச் சாலையில் 1,500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், பயிற்சி மருத்துவர்கள் 4 பேர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக ஜோசப்ராஜ், அனீஷ், ஆன்டோ, ரதீஷ், அல்போன்ஸ், விஷ்ணு தயாள் ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பயிற்சி மருத்துவர்கள் 6 பேரும் கோட்டயத்திலிருந்து காரில் சுற்றுலாத் தலமான வாகமண் வந்துள்ளனர்.
கோலாகலமேட்டுக்கு 3 கிலோமீட்டர் தொலைவில், மலைச்சாலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவர்கள் வந்த கார் அந்தச் சாலையில் 1,500 அடி பள்ளத்தில் அதிகாலையில் உருண்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள், விபத்து குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில் ஜோசப்ராஜ், அனீஷ், ஆன்டோ, ரதீஷ் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், பலத்த காயமடைந்த அல்போன்ஸ், விஷ்ணு தாயாள் ஆகியோர் மீட்கப்பட்டு, கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.