முகப்பு
தமிழ்நாடு

மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.

Updated On : 12 மே 2013, 3:15 am IST
பகிர்:

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் பின்னர், நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால், சிறையில் இருந்து ராமதாஸ் சனிக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த ராமதாஸ், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.