பழனி கோயில் உண்டியல் வரவு ரூ.1.35 கோடி
பழனி கோயில் உண்டியல்கள் கடந்த 23 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து அவை செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 1.35 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.
பழனி கோயில் உண்டியல்கள் கடந்த 23 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து அவை செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 1.35 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.
கோடை கால விடுமுறையை முன்னிட்டு, பழனிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என லட்சக்கணக்கானோர் வந்து சென்றதால், கடந்த 23 நாள்களில் கோயில் உண்டியல்கள் நிறைந்தன. எனவே, செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. முதல் நாள் எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 1 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரத்து 645 ரொக்கப் பணமாகக் கிடைத்துள்ளது.
மேலும், பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரம், வேல், செயின், கொலுசு, டாலர், தாலி, காவடி, உருவங்கள் என ஏராளமான பொருள்களையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
Advertisement