முகப்பு
தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்.: 1,537 இடங்கள் நிரம்பின: இன்றுடன் கலந்தாய்வு முடிவு

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 22) முடிவுக்கு வருகிறது.

Updated On : 22 ஜூன், 2013 at 3:52 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 22) முடிவுக்கு வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1,537 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

மொத்தம் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.) ஆகியோருக்கு உரிய அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பிவிட்டன.

Advertisement

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.), தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர் (எஸ்சிஏ), பழங்குடி வகுப்பினர் (எஸ்.டி.) ஆகியோருக்கு உரிய மொத்தம் 286 எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப இறுதியாக சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூலை 2-ஆவது வாரம்: சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலையில் செயல்பட உள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை மூலம் கிடைக்க உள்ள 285 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களில், தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய கூடுதல் இடங்களுக்கான மறு ஒதுக்கீடு கலந்தாய்வு மற்றும் சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்-அரசு பி.டி.எஸ். இடங்கள்-சுயநிதி அரசு பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆவது வாரம் நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.