தடுப்புச் சுவரில் கார் மோதல்: ஒருவர் சாவு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளிக்கிழமை தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளிக்கிழமை தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்த சண்முகக்கனி மகன் மகாலிங்கம் (55). இவரும், செங்குன்றத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் தினேஷ் (24), சென்னை பாடியநல்லூர் கணேசன் மகன் கண்ணன் (40) ஆகியோர் காரில் தூத்துக்குடி வந்தனர்.
தூத்துக்குடியில் வேலையை முடித்துவிட்டு, சென்னைக்கு காரில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர். அப்போது எப்போதும்வென்றானை அடுத்துள்ள சிவஞானபுரம் விலக்கு அருகே எதிர்பாராதவிதமாக அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்தது.
Advertisement
இதில் சம்பவ இடத்திலேயே மகாலிங்கம் உயிரிழந்தார். காயமடைந்த தினேஷ் மற்றும் கண்ணன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.