தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய கட்டுரைப் போட்டி முடிவுகள்
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டுக்கான கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற கட்டுரைகளில் பரிசுக்குரியவற்றை என்எல்சி கல்வித் துறை முதன்மை மேலாளர் என்.ஜோதிக்குமார் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர். அதன்படி பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் திருநெல்வேலியைச் சேர்ந்த தி.சு.பா.சந்துரு முதல் பரிசை தட்டிச்சென்றார். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நிகில் தீபிகா 2-வது பரிசுக்கும், சேலம் தாதகாபட்டியைச் சேர்ந்த அ.கு.நிஷா 3-ஆம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத் தவிர ஆறுதல் பரிசு வென்றவர்கள்: வே.பாலாஜி (மதுரை), ப.பவித்ரா (ஈரோடு), ச.பூர்ணிமா (கோவை), ச.மகாதேவன் (புதுச்சேரி), இ.கண்ணம்மாள் (திருநெல்வேலி).
Advertisement
Advertisement
ஆறுதல் பரிசு பெறும் நெய்வேலிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்: கே.ரக்ஷ்யா, ஆர்.எஸ்.ஸ்ரீராம், தி.காயத்ரி, எம்.கனகவேல்ஹரீஷ், இல.ஷியாம்குமார், ஆ.கதிரவன். கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் பரிசு வென்றவர்கள்: திண்டுக்கல்லைச் சேர்ந்த சி.சிவா முதல் பரிசை தட்டிச் சென்றார். நாகை மாவட்டம், அரங்கக்குடியைச் சேர்ந்த க.நெüபாபேகம் 2-வது பரிசுக்கும், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியைச் சேர்ந்த த.திருமூலநாதன் 3-ஆம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆறுதல் பரிசு பெறுவோர் விவரம்: எம்.பிரதீபா (கொடைக்கானல்), பி.கமலா (மேற்கு அடுக்காம்பாளையம், கரூர்), வை.கல்பனா (மணப்பாறை), எஸ்.பார்த்தசாரதி (பெருந்துறை), மு.செந்தில்குமார் (கரூர்), க.சண்முகமணிகண்டன் (சங்கரன்கோவில்), கோ.சரண்யா (அம்மாப்பேட்டை, சேலம்), சி.அபிநயா (திருமலைகிரி, சேலம்), க.சுவேதா (நெய்வேலி), எஸ்.சிவாபாண்டியன் (பெரியமேடு, சிதம்பரம் வட்டம்), க.காயத்ரி (மண்ணிவாக்கம், சென்னை).
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 12-ஆம் தேதி நடைபெறும் விழாவின்போது புத்தகக் கண்காட்சி குழுவினரால் பரிசு வழங்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.