ஏகாம்பரநாதர் கோயிலில் வருண ஜெபம்
மழை வேண்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிவகங்கை தீர்த்தத்தில் வருண ஜெபம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மழை வேண்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிவகங்கை தீர்த்தத்தில் வருண ஜெபம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விஜய வருடத்தில் நல்ல மழை பெய்து நாடு செழிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் வருணயாகம், வருண ஜெபம், சிறப்பு பூஜை நடத்த தமிழக இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வர்ணயாகம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திங்கள்கிழமை காலை ருத்ர அபிஷேகம், சிவகங்கை தீர்த்தத்தில் விரணஜெபம், வேதமந்திர பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. ஓதுவார்கள் திருமுறை பாடினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.