முகப்பு
தமிழ்நாடு

ஆழியார் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

கோவை மாவட்டம் ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கும், பொள்ளாச்சி நகர குடிநீர்த் தேவைக்கும் திங்கள்கிழமைமுதல் (ஜூலை 22) தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 21 ஜூலை, 2013 at 11:12 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM

கோவை மாவட்டம் ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கும், பொள்ளாச்சி நகர குடிநீர்த் தேவைக்கும் திங்கள்கிழமைமுதல் (ஜூலை 22) தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆழியார் அணையின் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு முதல் போக பாசனத்துக்காகவும், பொள்ளாச்சி நகர குடிநீர்த் தேவைக்காகவும் தண்ணீர் திறந்துவிடுமாறு ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

அவர்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.