முகப்பு
தமிழ்நாடு

பிரேமலதா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

முதல்வர் பற்றி கேப்டன் டிவியில் அவதூறு செய்தி வெளியிட்டது தொடர்பாக கேப்டன் டிவியின் நிறுவனத் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 2 -ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 1:49 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

முதல்வர் பற்றி கேப்டன் டிவியில் அவதூறு செய்தி வெளியிட்டது தொடர்பாக கேப்டன் டிவியின் நிறுவனத் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 2 -ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி தவறான செய்தி கேப்டன் டிவியில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டதாம். அது முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கேப்டன் டிவி நிறுவனத் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், நிர்வாக இயக்குநர் எல்.கே.சுதீஷ், செய்தி வாசிப்பாளர்கள் கிரிஜா ரவிசங்கர், சிங்காரவேலன். செம்மலர் ரமேஷ் ஆகியோர் மீது தமிழக அரசு சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞர் எம்.கே.அசோகன் ஆகிய இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Advertisement

இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிரேமலதா விஜயகாந்த் உள்பட 5 பேரும் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.