இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 41 பேருக்கு 28-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு
இலங்கையில் அனுராதபுரம் சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 41 பேருக்கும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் வரும் 28-ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டிப்பு செய்து புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் அனுராதபுரம் சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 41 பேருக்கும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் வரும் 28-ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டிப்பு செய்து புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூலை 7-ஆம் தேதி 5 படகுகளில் சென்ற 21 மீனவர்கள் மற்றும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி 5 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 20 மீனவர்களையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாகக் கைதுசெய்து, மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அனுராதபுரம் சிறையில் அடைத்திருந்தது.
இவர்கள் 41 பேரும் புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தபடி, நீதிபதி ஆனந்தி கனகரெத்தினம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 28-ஆம் தேதி வரை, சிறைக் காவலை நீட்டிப்புச் செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும், மீண்டும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் அனைவரும் புதன்கிழமை விடுதலையாகி விடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்களின் உறவினர்கள் இச் செய்தியால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.