வானமே மேற்கூரையானது: ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை
திருக்கோவிலூர் அருகே, மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலூர் அருகே, மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலூர்-கடலூர் பிரதானச் சாலையில் அமைந்துள்ள எல்ராம்பட்டு பஸ் நிறுத்தத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனாக இருந்து வரும் இந்த நிழற்குடை 3 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளது.
Advertisement
Advertisement
குறிப்பாக அதன் மேற்கூரை பாதி அளவுக்கு இடிந்து விழுந்துள்ளது. மீதமுள்ள மேற்கூரை எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பயணிகள் இந்த நிழற்குடையை பயன்படுத்துவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் பயணிகள்.
இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.