சென்னை: உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு தேறி வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மீண்டும் திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் - 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பல்வேறு கட்ட தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு அவரது உடல் நலம் தேறி விட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'திடீர்' உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதற்காகவும், அதைத் தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிகிச்சைக்கு பிறகு தற்போது அவரது உடல் நலம் சீராக உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.