மருத்துவக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் மருத்துவப் பேராசியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை (டிச.1) முதல் நடைபெற உள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், இணைப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர மற்றும் தாற்காலிக பதவி உயர்வுகள் அளிக்கப்பட உள்ளன.
இந்தக் கலந்தாய்வில் பொது மருத்துவம், மயக்கவியல், கண் மருத்துவம், மூடநீக்கியல் உள்பட 15 துறைகளில் பதிவு மூப்பின் அடிப்படையில் நிரந்த பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், தடயஅறிவியல், குழந்தைகள் நலம், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட 5 துறைகளில் தாற்காலிக முறையிலான பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.