சென்னை: இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக யாருக்கும் நான் லஞ்சம் கொடுக்கவில்லை. லஞ்சம் பெற்றதாக தில்லியில் கைதாகி உள்ள சுகேஷ் சந்திரா யார் என்று எனக்கு தெரியாது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தினகரன் கூறுகையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக யாரிடமும் நான் லஞ்சம் கொடுக்கவில்லை. அவ்வாறு தில்லியில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சந்திரா யார் என்றும் எனக்குத் தெரியாது. தொலைபேசியில் பேசியது கிடையாது.
அதிமுகவை முடக்குவதற்காக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் யார் உள்ளனர் என்று தெரியவில்லை.
தில்லியில் என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஏதாவது தில்லி போலீஸாரிடம் இருந்து சம்மன் வந்தால் சட்டப்படி அதனை சந்திப்பேன் என்றார்.
மேலும் கட்சியில் எந்த நெருக்கடியும் இல்லை. அமைச்சர்கள் யாரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தவில்லை என்று தெரிவித்தார்.