ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப் பேரவையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், உரையாற்ற காலை 10 மணிக்கு வந்தார். அவர் தனது உரையைத் தொடங்கிய போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து தனது கையில் வைத்திருந்த காகிதத்தை எடுத்து படித்தார். இதைத் தொடர்ந்து, அவரது தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளியேறினர்.
இதன்பின், செய்தியாளர்களிடம் பேசி மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, வறட்சி பாதிப்பு போன்ற பிரச்னைகளை முன்வைத்து ஆளுநர் உரையைப் புறக்கணித்துள்ளோம்' என்றார்.