தமிழ்நாடு

ஆட்சியை கலைக்க எடப்பாடியே போதும்: திமுக டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

DIN

ராஜபாளையம்: ஆட்சியைக் கலைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியே போதும் என்று திமுக செய்தி தொடர்பாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜபாளையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பணத்துக்காகவும், பதவிக்காக மட்டுமே.

போயஸ் கார்டனில் தீபாவுக்கும் உரிமை உள்ளதால் அவர் போராடி வருகிறார். செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி விட்டது.

பிளாஸ்டிக் அரிசி தொடர்பான தகவல்களை பரப்புவதும் அரசுதான். மறுப்பதும் அரசுதான். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய, மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், ஆட்சியை கலைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியே போதும். ஸ்டாலின் தேவையில்லை என்று கருத்து தெரிவித்தார் டி.கே.எஸ். இளங்கோவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT