தமிழ்நாடு

108 வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: பாண்டியராஜன் தகவல்

DIN

அதிமுக (புரட்சி தலைவி அம்மா) சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை 108 வாக்குறுதிகளுடன் திங்கள்கிழமை வெளியிடப்படும் என அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆர்.கே.நகர் தொகுதியில் முதன்முதலாக கட்டப்பட்ட வைத்தியநாதன் பாலம், துணைமின் நிலையம் ஆகியவை மதுசூதனன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதுதான் கட்டப்பட்டவை ஆகும்.
இத்தொகுதியில் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக மதுசூதனன் உள்ளார். இங்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை மதுசூதனன் தொடர்வார்.
இத்தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது.
வாக்குச்சீட்டு அல்லது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமா என்று கேட்கப்படுகிறது. தற்போது வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 18 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றுவிட்டாலே போதும்; மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்ய முடியும் என்றார் பாண்டியராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT