முகப்பு
தமிழ்நாடு

தேச விரோத வழக்கு: வைகோ ஜாமீன் கோரி மனு

தேச விரோக வழக்கில் சிறையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

Updated On : 23 மே 2017, 1:24 pm IST
பகிர்:

தேச விரோக வழக்கில் சிறையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ மீது தேசத் விரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் சென்னை பெருநகர 14 -ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு கடந்த மாதம் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் பெறுவதற்கு வைகோ மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வைகோ, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Advertisement

இந்நிலையில் தேச விரோக வழக்கில் சிறையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.