எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னையில் டிசம்பரில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சட்டத்தால் சசிகலா தண்டிக்கப்பட்டவர் என்பதால்தான் முதல்வர் சந்திக்கவில்லை.
தொடர்ந்து அவதூறு பரப்பினால் டிடிவி தினகரன் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் மீது வழக்கு இருப்பதாக பொய்யான தகவல்களை தினகரன் கூறி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.