தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை: உயர்நீதிமன்றம் கேள்வி

DIN

நீட் தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தமிழக அரசு புதன்கிழமை (செப்.20) பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதி என்.கிருபாகரன், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் மாணவி கிருத்திகாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு முறையாகப் பின்பற்றியிருந்தால், மாணவி அனிதாவின் மரணத்தை தடுத்து இருக்கலாம் எனக்கூறி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். 
இந்த நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி , நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளன, இதில் அரசியல் கட்சியினர் எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளனர், அவை அமைதியான முறையில் நடத்தப்பட்டதா, மாணவர்கள் ஈடுபட்ட போராட்டங்கள் எத்தனை, போராட்டம் தொடர்பாக எத்தனை மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அரசியல் கட்சியினரை தவிர்த்து இந்தப் போராட்டத்தை வேறு ஏதேனும் தனியார்அமைப்புகள் தூண்டி விடுகின்றனவா, நீட் தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாகவும், அத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது தொடர்பாகவும் மாணவர்களுக்கு, தமிழக அரசு ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை, போராட்டம் காரணமாக பதிவு செய்யப்படும் வழக்குகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடாது, நீட் தேர்வுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்று தமிழக மாணவர்களுக்கு கேள்விகள் வழங்கப்பட்டுள்ளதா, என்பது குறித்து புதன்கிழமையன்று (செப்.20) பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT