முகப்பு
தமிழ்நாடு

காவிரி பிரச்னையில் நல்ல முடிவு கிடைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 6 ஏப்ரல் 2018, 1:33 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமாகா சார்பில் வெள்ளிக்கிழமை (ஏப்.6) திருச்சியில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக வரும் 9 -ஆம் தேதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
இந்த அறிவிப்பை நம்பி காத்திருக்கும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments