முகப்பு
தமிழ்நாடு

முழு அடைப்பு எதிரொலி: தமிழக, கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

முழு அடைப்பு காரணமாக தமிழக - கர்நாடக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:43 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது. 

முழு அடைப்பையொட்டி தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லக் கூடிய அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. அதே போல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளன. 

மேலும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளும், அதே போன்று சத்தியமங்கலத்திற்கு இயக்கப்படும் கர்நாடகா மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

முழு அடைப்பு காரணமாக தமிழக - கர்நாடக எல்லையில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments