யாரை பார்த்தும் அஞ்சமாட்டேன்: விஜயபிரபாகரன் அதிரடி பேட்டி
யாரை பார்த்தும் அஞ்சமாட்டேன், எதற்கும் முடியாது என்று சொல்ல மாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன்
சென்னை: யாரை பார்த்தும் அஞ்சமாட்டேன், எதற்கும் முடியாது என்று சொல்ல மாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
தேமுதிக சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கேக் வெட்டி, அப்பகுதி மக்களுக்கு பிரியாணி விநியோகம் செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் நாடு திரும்புவார். தேமுதிகவில் எந்த குழப்பமும் இல்லை என்றும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவு செய்யப்படும் என்றார்.
Advertisement
Advertisement
மேலும், யாரை பார்த்தும் நான் அஞ்சமாட்டேன். எதற்கும் முடியாது என்று சொல்ல மாட்டேன் என்றவர் கட்சித் தலைமை கூறினால் தேர்தலில் போட்டியிடுவேன் என விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.