திருச்சி: கிறிஸ்துமஸ் என்றாலே தேவாலயங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டுவது வழக்கம்தான். ஆனால், தற்போது தேவாலயங்களின் அறிவிப்பினால் தமிழகத்தின் மாநிலக் கட்சிக்கும் கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தேவாலயங்களின் அறிவிப்பினால் ஸ்டாலின் தலைமையேற்றிருக்கும் திமுகவுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சிக் கிடைத்துள்ளது.
அதாவது, அனைத்து தேவாலயங்களின் பிஷப்புகளும் ஒன்றாக ஆலோசனை நடத்தி, வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுத்து அதனை அறிவித்தும் உள்ளனர்.
இதனைக் கொண்டாடும் வகையில் கிறிஸ்டியன் நல் எண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், எப்போதுமே திமுக சிறுபான்மையினர் பக்கமே நிற்கும் என்றும், ஏழை மற்றும் சிறுபான்மையினர் பக்கமே கருணாநிதி எப்போதும் நின்றுள்ளார் என்றும் கூறினார்.
சிறுபான்மையினர் பக்கம் திமுக நிற்பதால், பெரும்பான்மை மக்களுக்கு எதிரானக் கட்சியாக மாறிவிடாது. சிறுபான்மையினருக்கு உதவுவது நமது கடமை. ஆனால், பாஜக மக்களைக் குழப்பி வருகிறது. தமிழகத்தில் இருந்து பாஜகவை தள்ளி வைக்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது. தற்போது இதையேதான் தேசிய அளவில் செய்யப்போகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
எனவே, வேறு யாரையும் விட இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைத்தானே?!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.