தமிழ்நாடு

தமிழக நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தினமணி

தமிழக நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
 ஈரோட்டில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா எனத் தெரியாது. இதுகுறித்து மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசரிடம்தான் கேட்க வேண்டும்.
 தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் மீது அக்கறை இருந்திருந்தால், தமிழகத்தின் வளர்ச்சி, அதற்கான திட்டங்கள் குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும் கருத்து வெளியிட்டிருப்பார். ஆனால், அக்கறை இல்லாததால்தான் எந்தக் கருத்தையும் அவர் கூறவில்லை என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT