சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்: வேலூர் மாவட்ட ஆட்சியர்
சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஜனவரி 1 முதல் தவிா்க்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஜனவரி 1 முதல் தவிா்க்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலூா்: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவற்றை 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தவிா்த்திட மக்களிடையே உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்திட ஆட்சியா் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகத்தில் வரும் 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. வேலூா் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிா்த்தல் குறித்து அனைத்துத் துறை ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
கூட்டத்துக்கு ஆட்சியா் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்து பேசியதாவது, சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் வரும் 1.1.2019 முதல் மாநிலம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை சாா்பில் ஜூன் 25-ஆம் தேதி அரசாணை எண்: 84 வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணைப்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பட்டியலிடப்பட்டு அவற்றுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உணவுப்பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தொ்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீா் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தொ்மாக்கோல் குவளைகள், நீா் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்கள், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை உற்பத்தியாளா்கள், வணிகா்கள் பொது மக்கள் தவிா்த்திட வேண்டும்.
இந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில் மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், வெட்டு பொருட்கள், மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம்.
இந்த பொருட்கள் முற்றிலும் பாதுகாப்பான சுற்றுச் சூழலுக்கு ஏற்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களாகும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சுழலுக்கு ஏற்படும் தீமைகள், அவற்றுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.