தமிழ்நாடு

புழல் சிறையில் ரவுடியை கொடூரமாக அடித்துக் கொன்ற சக கைதிகள்

DIN


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாக்ஸர் முரளி என்ற கைதியை, சக கைதிகள் பயங்கரமாக தாக்கி கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை, வழிப்பறி உட்பட 16 வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ரவுடி முரளி. இவர் வியாசர்பாடியைச் சேர்ந்தவர்.

இதே புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 ரவுடிகளுக்கும், முரளிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை சிறையின் கழிவறைக்குள் வைத்து 5 ரவுடிகளும் முரளியை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

முரளியின் உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT