தமிழ்நாடு

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நிறைவு

DIN

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மார்ச் 27-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட கலந்தாய்வுக்குப் பின்னர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிரம்பாத இடங்கள், அந்தந்த மாநிலங்களின் ஒதுக்கீட்டுக்கான ஏப்ரல் 23-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வுக்கான முடிவுகள் சனிக்கிழமை (மே 19) வெளியிடப்படும். 
ஜ்ஜ்ஜ்.ம்ஸ்ரீஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் கலந்தாய்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் வரும் மே 26-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சென்று சேர வேண்டும். 
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள், மே 26-ஆம் தேதி மாலையில் அந்தந்தக் கல்லூரிகளிடமே சமர்ப்பிக்கப்படும்.
அந்த இடங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகள் நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம். தனியார் கல்லூரிகள் மூலம் இடங்களைப் பெறும் மாணவர்கள் மே 31-ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT