அக். 19-இல் ராஜராஜ சோழன் சதய விழா தொடக்கம்
தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033-வது சதய விழா அக்டோபர் 19-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, திங்கள்கிழமை பந்தல்கால் நடும்
தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033-வது சதய விழா அக்டோபர் 19-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, திங்கள்கிழமை பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பார் போற்றும் புகழை உடைய பெரியகோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033-வது சதய விழா அக்டோபர் 19-ஆம் தேதி தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான அக். 20-ம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த இருநாள் விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்குச் சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன.
இதை முன்னிட்டு, பெரியகோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. பந்தக் காலுக்குப் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டன.