10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டம்: சிபிஎஸ்இ முடிவு
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
தற்போது பொதுத்தேர்வில் 33 சதவீதம் மதிப்பெண் மற்றும் செயல்முறை தேர்வில் 33 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாக உள்ளது. இந்த நடைமுறையை மாற்றி எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு இரண்டிலும் சேர்த்து 33 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும் என்கிற புதிய மதிப்பெண் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அனுப்பி உள்ளது.
Advertisement
Advertisement