தமிழ்நாடு

சிவன்மலையில்  ஆண்டவன் உத்தரவு' செம்மண் வைத்து சிறப்பு வழிபாடு

DIN


காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், "ஆண்டவன் உத்தரவு'ப்படி செம்மண் வைத்து செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் "ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து வழிபாடு செய்வது சிறப்பம்சம். பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பு கற்றூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம்.
சிவன்மலை முருகனே பக்தர்களின் கனவில் வந்து எந்தப் பொருளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இது "ஆண்டவன் உத்தரவு' என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லை. மற்றொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருளே கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்படும் பொருள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பதும், அந்தப் பொருளின் மதிப்பு ஏற்றமோ, இறக்கமோ பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
கடைசியாக கடந்த ஜூலை 6ஆம் தேதி செம்பினால் செய்யப்பட்ட அம்பு வைத்துப் பூஜை செய்யப்பட்டு, திங்கள்கிழமை (செப். 17) வரை கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பக்தையின் கனவில் வந்ததாகக் கூறி செவ்வாய்க்கிழமை செம்மண் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், கண்ணாடிப் பேழைக்குள் அந்த செம்மண் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT