முகப்பு
தமிழ்நாடு

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கௌரவக் குறைச்சலா? ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கௌரவக் குறைச்சலா? என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 13 ஜூலை 2019, 12:43 pm IST
பகிர்:


சென்னை: அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கௌரவக் குறைச்சலா? என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி இந்த கேள்வியை எழுப்பினார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சமீபகாலமாக அரசின் முடிவுகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்றும் நீதிபதி பார்த்திபன் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

மேலும், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கௌரவக் குறைச்சலா? என்று வழக்குத் தொடர்ந்த பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.

மழலையர் வகுப்பு எடுக்கும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட எந்த பலன்களிலும் மாற்றமில்லை என்று அரசு தெரிவித்திருந்தது.

இதைக் கேட்ட நீதிபதி, அங்கன்வாடி மையங்களில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அங்கு பணியாற்ற உத்தரவிட்டார்.

மேலும், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்கியிருக்கும் பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிபதி தனது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments