தமிழ்நாடு

தமிழகத்தில் 21 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு

DIN

தமிழகத்தில் நிகழாண்டில் 21,965 பேருக்கு காசநோய் பாதிப்பு  கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
அதன் பயனாக, காசநோய் பாதிப்பு குறித்த தொடர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, காசநோயைக் குணப்படுத்தும் விகிதம், கணிசமாக உயர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்
றன. காசநோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேர் முதல்கட்ட சிகிச்சையிலேயே குணப்படுத்தப் படுவதாகவும், தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்களும் பூரண குணமாக்கப்படுவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்படுவதாகவும்  கூறினர். இந் நிலையில், நிகழாண்டில் தனியார்,அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின்  தரவுகளை ஆய்வு செய்தபோது, நாடு முழுவதும் 3.85 லட்சம் பேருக்கு காசநோயின்  தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. 
கடந்த சில ஆண்டுகளாக, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் காசநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதன் நீட்சியாகவே, நடப்பு ஆண்டின் புள்ளிவிவரங்களும் அமைந்துள்ளன. நிகழாண்டில், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 67  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 21,965 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 4,573 பேரும், அரசு மருத்துவமனைகளில் 16,392 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT