14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 14 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 113 டிகிரி வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 14 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 113 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வேலூரில் 110 டிகிரி, திருச்சியில் 107 டிகிரி, கரூர்பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் தலா 105 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், சேலத்தில் தலா 104 டிகிரி, தருமபுரி, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிபேட்டையில் தலா 102 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், நாகப்பட்டினம், கடலூரில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரியில் 102 டிகிரி, காரைக்காலில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் உள் தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட உயர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சில இடங்களில் அனல் காற்று வீசியது. உள்தமிழகத்தில் சில இடங்களில் மே 27, 28 தேதிகளில் வெப்பநிலை வழக்கத்தைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது
என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.