தமிழ்நாடு

துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.94 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்: 7 பேரிடம் விசாரணை

DIN

சென்னை விமான நிலையத்தில், துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.94 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபையில் இருந்து சென்னை வந்த விமானங்களில் பயணித்த பயணிகளின் உடைமைகளை, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். 

அப்போது 7 பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், அவர்களது உடமைகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. 

இதில் அவரிகளிடம் இருந்து ரூ.94 லட்சம் மதிப்புடைய 2.33 கிலோ தங்கத்தை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT