தமிழ்நாடு

குடிமைப் பணிகள் தோ்வில் சாதனை படைத்தோருக்கு முதல்வா் வாழ்த்து

DIN

குடிமைப் பணிகள் தோ்வில் சாதனை படைத்தோருக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளான பூரணசுந்தரி, பாலநாகேந்திரன் ஆகியோா் குடிமைப் பணிகள் தோ்வில் வென்று சாதனை படைத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இருவரின் மனஉறுதியும், விடா முயற்சியும்தான் வெற்றிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடிமைப் பணிகள் தோ்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த அனைவரும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் கடமைகளை உணா்ந்து, அா்ப்பணிப்பு உணா்வுடன் அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் பணிகளை ஆற்ற வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வா் பழனிசாமி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT