முகப்பு
தமிழ்நாடு

கூட்டுறவுத்துறை அமைச்சரின் மாமியார் மறைவு: முதல்வர் இரங்கல்

கூட்டுறவுத்துறை அமைச்சரின் மாமியார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
பகிர்:

கூட்டுறவுத்துறை அமைச்சரின் மாமியார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூட்டுறவுத்துறை அமைச்சரின் மாமியார் அம்மாள் ரத்தினம் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (5.12.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
ரத்தினம் அம்மாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கும், அவருடைய மனைவிக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரத்தினம் அம்மாளின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →