தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் நடைபெற்ற கொள்ளை முயற்சி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடப்பாரை மற்றும் எரிவாயு வெல்டர் மூலம் வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே செல்ல கொள்ளையர்கள் முயன்றுள்ளனர். அப்போது, வங்கியில் இருந்த காலண்டர் மற்றும் ஒயர்கள் தீப்பிடித்ததால் அச்சமடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலறிந்த அஞ்செட்டி காவல் ஆய்வாளர் ரவிக்குமார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த கொள்ளை முயற்சியானது திங்கள்கிழமை அதிகாலை 4 மணி அளவில் நடைபெற்றுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT