தமிழ்நாடு

சென்னையில் ஜூலை 27 வரை போராட்டம் நடத்த தடை

DIN

சென்னை: சென்னையில் ஜூலை 27 வரை போராட்டம் நடத்தத் தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது இம்மாத இறுதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இம்மாத இறுதி வரை தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது என்று தமிழக அரசு திங்கள் மாலை அறிவிப்பினை வெளியிட்டது.

இந்நிலையில் சென்னையில் ஜூலை 27 வரை போராட்டம் நடத்தத் தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையில் ஜூலை 27 வரை பேரணி, ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி உள்ளிட்ட எந்த வகையான போரட்டங்களும் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT