தமிழ்நாடு

ஈரோடு போலீஸ் சோதனைச் சாவடியில் ஆவி நடமாட்டம்?

சிசிடிவி பதிவு காட்சிகளில் தெரியும் உருவத்தால், ஈரோடு அருகே போலீஸ் சோதனைச் சாவடியில் ஆவி நடமாட்டம் இருப்பதாக செய்தி பரவி வருகிறது.

DIN


ஈரோடு: சிசிடிவி பதிவு காட்சிகளில் தெரியும் உருவத்தால், ஈரோடு அருகே போலீஸ் சோதனைச் சாவடியில் ஆவி நடமாட்டம் இருப்பதாக செய்தி பரவி வருகிறது.

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் எல்லைப் பகுதியாக கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி உள்ளது.  இந்த சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் வெள்ளை நிறத்தில் இரு உருவங்கள் சாலையில் சிறிது தூரம் நகர்வது போன்று காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதுதொடர்பான பதிவுகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இதனைப் பார்த்து போலீஸார், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஆவி நடமாட்டம் குறித்த தகவல் ஈரோடு, பள்ளிபாளையம் பகுதியில் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT