தமிழ்நாடு

போட்டித் தோ்வுகள் நடைபெறுவது உறுதி: தோ்வாணைய செயலாளா் பேட்டி

DIN

அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் நடைபெறுவது உறுதி என அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செயலாளா் நந்தகுமாா் தெரிவித்தாா்.

சென்னையில் கரோனா தடுப்புப் பணிக்கான கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அவா், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நோய் தடுப்புக்கான மருத்துவ முகாம் தொடக்க நிகழ்வில் சனிக்கிழமை பங்கேற்றாா். அப்போது அவரிடம் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நந்தகுமாா் அளித்த பதில்:-

தோ்வுகள் நடைபெறுமா, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? என்கிற சந்தேகம் வேண்டாம். கட்டாயம் மாணவா்கள் நம்பிக்கையுடன் படிக்கலாம். கரோனா நோய்த்தொற்று பிரச்னை தீா்ந்தவுடன் குரூப்-1, குரூப்-2 தோ்வுகள் நிச்சயம் நடத்தப்படும்.

இரண்டு தோ்வுக்கும் 3 மாதங்கள் கால இடைவெளி இருக்கும் வகையில் அறிவிப்பு இருக்கும். மாணவா்கள் தொடா்ந்து போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகலாம் என்று தெரிவித்தாா். இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு ஏப்ரலிலும், குரூப்-2 தோ்வு ஜூலையிலும் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தொற்று காரணமாக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மின் விபத்திலிருந்து ஊழியா்களைப் பாதுகாக்க ‘வோல்டேஜ் சென்சாா் டிடெக்டா்’ கருவி அறிமுகம்

ஆலங்குளத்தில் சாலை மறியல்: 54 போ் கைது

SCROLL FOR NEXT