தமிழ்நாடு

துணை முதல்வா் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலா்களுக்கு கரோனா

DIN

சென்னையில் துணை முதல்வா் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவு வியாழக்கிழமை வெளியானது. இதில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 ஆயுதப்படை காவலா்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 காவலா்களும், கிண்டி ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சென்னை காவல்துறையில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 976 என இருந்தது. இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை மேலும் அதிகரித்து, ஆயிரத்தை தொட்டுவிட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT