தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அண்மைக் காலமாக மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாகச் சரிந்தது. இந்த நிலையில், காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.
மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 686 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை காலை நொடிக்கு 1,018 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100. 01 அடி; நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT