தமிழ்நாடு

போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவு

DIN

வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களின் விவரங்களைச் சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளா் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொள்ளக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

எனினும், வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சில ஆசிரியா் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்டன.

இதையடுத்து அரசின் உத்தரவை மீறி போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT