தமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மனைவி கோமதி 48. இவர் நான்கு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். 

திங்கள்கிழமை காலை கல்லாவி செல்லும் சாலையில் உள்ள சின்ன கவுண்டர் என்பவரது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார். இந்நிலையில் அருகிலிருந்த மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்ததில் பசுமாடு மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசு இறந்தது. 

மீதமுள்ள 3 பசுமாடுகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதுகுறித்து கோமதி சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT