தமிழ்நாடு

தமிழக எல்லைப் பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாட்டம்

DIN

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் உத்தரவின் பேரில் தமிழக-ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக-ஆந்திர எல்லையில் தமிழக பகுதியான ஆரம்பாக்கத்தில் அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை ஒன்றிய செயலாளர் டி.சி.மகேந்திரன், ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு தலைமையில் அதிமுகவினர் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஆரம்பாக்கம் பஜாரில்  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

நிகழ்வில் ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் வெ.தனசேகர், அதிமுக நிர்வாகிகள் பிரகாஷ், நிஜாம், ஐயப்பன்,ராஜீ, முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி பஜாரில் நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் ஓடை ராஜேந்திரன், விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

கவரப்பேட்டையில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி தலைமையில் சுந்தம், மீரான், செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்று பட்டாசு வெடித்து அனைத்து கடைக்காரர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

புதுகும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிமுக பிரமுகர் எல்.சுகுமாறன் தலைமையில் ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், அதிமுக பிரமுகர்கள் ராஜா, விஜய் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அதே போல கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளிலும், பல்லவாடாவில் ஒன்றிய கவுன்சிலர் ரோஜா ரமேஷ்குமார் தலைமையிலும், பெரிய புலியூரில் மாவட்ட பிரதிநிதி ஷியாமளா தன்ராஜ் தலைமையிலும், பூவலம்பேட்டில் கருணாகரன் தலைமையிலும் அதிமுகவினர் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பிற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT