ராணிப்பேட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில், வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் நிகழும் பேரிடர்களில் சிக்குபவர்களை மீட்பது குறித்த ஒத்திகை பயிற்சியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தமிழக தீயணைப்பு துறை இணைந்து ராணிப்பேட்டை பாரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி
இந்த ஒத்திகை பயற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார். ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க. இளம்பகவத் பேரிடர் மீட்பு குழுவின் செயல்படுகள் குறித்து பேசினார்.