தமிழ்நாடு

சட்டப் படிப்புகள் கலந்தாய்வு தொடக்கம்

DIN

சென்னை: சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதனை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமைச் செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்தாா்.

பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவா்கள், ஐந்து ஆண்டு கால ஒருங்கிணந்த சட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. சீா்மிகு சட்டப் பள்ளியில் ஐந்து ஆண்டு கால ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கு 5 ஆயிரத்து 283 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதில் 4 ஆயிரத்து 910 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 373 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 4 ஆயிரத்து 910 பேருக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் விவரம் கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சட்டக் கல்வியில் சேருவதற்கான ஆன்-லைன் கலந்தாய்வை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT