முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பரிசு பற்றி பேசினேனா? பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம்

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறியதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Updated On : 21 டிசம்பர் 2020, 12:00 pm IST
பொங்கல் பரிசு பற்றி பேசினேனா? பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம்
பகிர்:


சென்னை: தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறியதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதில், ரூ.2000க்காக ஐந்து ஆண்டுகளை அடகு வைத்து விடாதீர்கள் என்றும், கொள்ளையடித்த பணத்தை மக்களிடமே தேர்தல் நேரத்தில் ரூ.2000 கொடுப்பதுதான் தமிழக அரசியல் என்றும் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகை குறித்து அண்ணாமலை கருத்துக் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அது உண்மையல்ல என்று அண்ணாமலை தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இன்று அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சொல்லாததை சொல்லி, பிரச்னையை உருவாக்கி அதில் குளிர் காயலாம் என்பதுதான் இவர்கள் நினைப்பு.. இதற்குப் பெயர் நடுநிலை அல்ல.. கெடும் நிலை !

சில ஊடகங்கள், பொங்கலுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக,  தவறாக சித்தரித்து கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில், 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது, அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதை தவறாக சித்தரித்திருக்கிறார்கள். நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்பவும்  பெரும் முயற்சி செய்கின்றன சில ஊடகங்கள். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும். வாழ்க,வளர்க தமிழ்நாடு என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments